செய்திகள் :

ரமலான் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு தொடங்கியது!

post image

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

ரமலான் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம் - கன்னியாகுமரி விழாக்கால சிறப்பு விரைவு ரயிலானது (06037) வரும் 28 ஆம் தேதியும், மறுவழித்தடத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06038) வரும் 31 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்!


ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இயக்கப்படும் ரயில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி இரவு 11.50-க்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

மறுவழித்தடத்தில் மாா்ச் 31-ஆம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று(மார்ச் 23) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

கருப்பசாமி பாண்டியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

மனோஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல்

சென்னை: இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மறைவுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகரு... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிமுக அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன்(76) உடல் நல குறைவால் புதன்கிழமை காலை காலமானார். மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க