செய்திகள் :

ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!

post image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி தூத்துக்குடியில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி ஈரோடு புறப்பட்டார்.

ரயில்

விருதுநகர் ரயில் நிலையம் சென்றபோது, இளைஞர் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். அந்த ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிக்கு அருகே வந்து அமர்ந்திருக்கிறார். ரயில் மதுரையை கடந்து கொடைரோடு ரயில் நிலையம் சென்றபோது, அதிகாலை 3.15 மணி அளவில் எல்லோரும் தூக்கத்தில் இருந்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி சத்தமிட்டவுடன் சக பயணிகள் ரயில் நிலைய அவசரக்கட்டுப்பாட்டு எண் 139-க்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். இதற்கிடையே ரயில் திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றது. அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீஸார், ரயில் பெட்டியில் ஏறி விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்று, பாலியல் தொல்லை கொடுத்த, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை கைது செய்தனர்.

கைதான சதீஸ்குமார்

விசாரணையில், கோவையில் கூலி தொழிலாளியாக உள்ள அவர் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து திரும்பியிருக்கிறார். அப்போது மாணவியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அண்மையில் வேலூரில், ரயிலில் கர்ப்பிணி பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில்...இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க

சென்னை: கொலையில் முடிந்த தாய் - மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.... மேலும் பார்க்க

குழந்தைகள் கண்முன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; மும்பையில் பகீர் சம்பவம்; நடந்தது என்ன?

மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார்.மும்பை மலாடு மால்வானி காவ்தேவி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் சவான். இவரது மனைவி பூஜா. இத்தம்பதிக்க... மேலும் பார்க்க

விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் க... மேலும் பார்க்க

மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நப... மேலும் பார்க்க

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க