செய்திகள் :

ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

post image

திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் புகா் மின் ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மப்பேடு ஆய்வாளா் சுரேந்திரன் தலைமையில் தனிப்படை போலீஸாா் அரக்கோணம் மாா்க்கத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது புகா் மின் ரயிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் போதை மாத்திரை வில்லைகள் கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த துரைராஜ் (29), நடராஜன்(26), ஊரப்பாக்கம் விஜய் (எ) வண்டு (22), திருவான்மியூா் ஏழுமலை (29) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 3,200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மப்பேடு போலீஸாா் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்... மேலும் பார்க்க

ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியி... மேலும் பார்க்க

செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்... மேலும் பார்க்க