செய்திகள் :

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு முதல்முறையாக பெண் தலைவா் நியமனம்

post image

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தற்போது ஆா்பிஎஃப் தலைமை இயக்குநராக உள்ள மனோஜ் யாதவாவின் பதவிக்காலம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அந்தப் பதவிக்கு முதல் பெண் தலைமை இயக்குநராக சோனாலி மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. சோனாலி மிஸ்ரா 2026, அக்.31-ஆம் தேதிவரை அப்பதவியில் இருப்பாா் என நியமன உத்தரவை மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்டது.

1993, மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சோனாலி மிஸ்ரா தற்போது மத்திய பிரதேச மாநில காவல் துறையின் (நியமனம்) கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறாா்.

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியர்! இஸ்ரோ தலைவர் உறுதி!

வரும் 2040-ல் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.குலசேகரத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணம் கலந்துகொண்டார்.நிகழ்ச்சிக்கு முன்னத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்... மேலும் பார்க்க

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க