செய்திகள் :

மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி

post image

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 பேர் பலியாகினர். கட்டல் துணைப்பிரிவு அதிகாரி சுமன் பிஸ்வாஸின் கூறுகையில், கட்டல் தொகுதி மற்றும் நகராட்சியின் பல இடங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஆனால் சந்திரகோனா, பாக்கா பாயிண்ட் மற்றும் கேதா ஆறு ஆகிய இடங்களில் நீர்மட்டம் இப்போது குறைந்து வருகிறது. சந்திரகோனாவின் நிலைமை சீரானது. ஆனால் கட்டலில், நிலைமை மோசமடைந்து வருகிறது. மருத்துவக் குழுக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் மீட்புக் குழு தற்போது செயல்பாட்டில் உள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: வரலாற்று வெற்றியை ருசித்த போலந்து மகளிரணி!

கிஷ்வாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணவில்லை. நாங்கள் அவரைத் தேடி வருகிறோம். இந்த வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகினர். கட்டல் தொகுதியில் உள்ள கோடி போனார்பூரைச் சேர்ந்த 7 வயது பள்ளி மாணவி சுல்தானா பலியானார். மேலும் ஒருவரைக் காணவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மழைக்காலம் தொடங்கியதிலிருந்து ஹிமாசலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை 91 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continuous rainfall has led to severe flooding in several parts of West Bengal's Paschim Medinipur district, including Ghatal, claiming two lives on Saturday.

மொழி குறித்து அவதூறு: ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனை! வைரல் விடியோ

மராத்தி மொழியை அவதூறாகப் பேசியதாக சிவசேனை கட்சியைச் (உத்தவ் பிரிவு) சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் ஒருவர் மராத்தி... மேலும் பார்க்க

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க