செய்திகள் :

ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

post image

ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையானது 11 மணிநேரம் கழித்து வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில், இன்று (ஜூலை 30) காலை 8.25 மணியளவில், பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சதிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவானது.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் குறில் தீவிகள் மற்றும் கம்சாட்கா மாகாணத்தில் சில முக்கிய நகரங்களின் கடல்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. சில இடங்களில் சுனாமி அலைகள் தாக்கும் விடியோக்களும் வெளியாகின.

இந்நிலையில், கம்சாட்கா மாகாணத்துக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையானது, தற்போது திரும்பப் பெறப்படுவதாக, ரஷியாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவிலும், ஜப்பானின் சில பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள், சில மணிநேரங்களில் ஆலோசனைகளாகக் குறைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ரஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால், செவேரோ - குரில்ஸ்க் மீன்பிடித் துறைமுகத்தை, சுமார் 6 மீட்டர் (19 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு

A tsunami warning issued following a powerful earthquake in Russia has been lifted after 11 hours.

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க