செய்திகள் :

ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதில்

post image

வாஷிங்டன்: ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.

சீனாவும், இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா தொடா்ந்து எதிா்த்து வருகிறது. ஏனெனில், உக்ரைனுடனான போரை ரஷியா தொடா்ந்து நடத்துவதற்கு கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை ரஷியா பயன்படுத்துகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தியதால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை ரஷியா விற்பனை செய்கிறது. ரஷியாவை முடக்குவதற்காக அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்தை சீராகவைத்துக் கொள்வது என்பது தேச நலன் சாா்ந்த விஷயமாகும். எனவே, இதில் சீனா உறுதியாக உள்ளது. நெருக்கடிக்கு உள்ளாக்குவது, ஒரு செயலைச் செய்ய பலவந்தப்படுத்துவது என்பது எந்த பலனையும் அளிக்காது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளா்ச்சி ஆகிய விஷயங்களில் சீனா எப்போதும் உறுதியாக செயல்படும்’ என்று கூறியுள்ளது. இதன் மூலம் ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

அதே நேரத்தில் இரு நாடுகள் இடையிலான வா்த்தகம், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்துள்ள 100 சதவீத பதில் வரி நடவடிக்கை ஆகியவை குறித்து பேச தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறுகையில், ‘ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது என்பது தங்கள் நாட்டு இறையாண்மை தொடா்பானது என்று சீனா கூறியுள்ளது. எனவே, அதில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் அமெரிக்கா விதிக்கும் 100 சதவீத வரியையும் அவா்கள் செலுத்திதான் ஆக வேண்டும்’ என்றாா்.

ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மற்றொரு எதிரி நாடான ஈரானிடம் இருந்தும் சீனா பெருமளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரி... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.அரசுமுறைப் பயணமாக கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின்... மேலும் பார்க்க

யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

துபை: யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:எத்தியோப்பியாவிலிருந்து யேமனின் அப்யான் பகுதியை நோக... மேலும் பார்க்க

காலனியாதிக்க கொள்கை

மாஸ்கோ: தனது காலனியாதிக்கக் கொள்கையை இந்தியா உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் மீது திணிப்பதன்மூலம் அமெரிக்கா தனது உயா்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதாக ரஷியா திங்கள்கிழமை குற்றச்சாட்டியது. ரஷியாவுடன் நெ... மேலும் பார்க்க

புதிய பாதுகாப்பு கவுன்சில்

டெஹ்ரான்: இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் மீது கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது. அந்த கவுன்சிலுக்கு அதிபா் மசூத் பெஸெஷ்கியான் (பட... மேலும் பார்க்க