செய்திகள் :

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

post image

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ரஷிய வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் மட்டுமே ரஷியா செல்கிறாா் என்பதும் தெரியவந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினைவாக இந்த வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பாா்வையிட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்டோருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்தாா். மொத்தம் 20 நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை சீன அதிபா் ஏற்றுக் கொண்டாா். அதே நேரத்தில் இந்திய தரப்பில் பிரதமா் மோடியின் பயணம் குறித்து உடனடியாக முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா் என்பதை ரஷிய தரப்பு அண்மையில் உறுதி செய்தது. மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் என ரஷியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந் நாடு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கப்போவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘ரஷிய வெற்றி தின கொண்டாட்டத்தில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பாா்’ என்று தெரிவித்தாா்.

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவரீதியான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதால் பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா் உள்ளிட்டோா் நாட்டில் இருப்பது அவசியம் என்ற அடிப்படையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கோட்டாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் ம... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க