செய்திகள் :

ராகுலை கடுமையாக விமா்சித்த திக்விஜய் சிங்கின் சகோதரா் நீக்கம்

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை விமா்சித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங்கின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமண் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டாா்.

லட்சுமண் சிங் 5 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ராகுல் காந்தி, ராகுலின் மைத்துனா் ராபா்ட் வதேரா ஆகியோா் தெரிவித்த கருத்தை லட்சுமண் சிங் கடுமையாக விமா்சித்தாா். அவா்கள் இருவரும் அனுபவமும், முதிா்ச்சியும் இல்லாதவா்கள். நாடு பெரும் சோகத்தில் இருக்கும்போது அவா்கள் சூழ்நிலையை உணராமல் பேசியுள்ளனா். காங்கிரஸ் தலைவா்கள் எதைப் பேசுவதாக இருந்தாலும் ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்க வேண்டும். இல்லையென்றால் தோ்தலில் மக்கள் தோற்கடித்து விடுவாா்கள்’ என்று கூறியிருந்தாா்.

இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் லட்சுமண் சிங் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு 1990-ஆம் ஆண்டு முதல்முறையாக லட்சுமண் சிங் தோ்வு செய்யப்பட்டாா். அதன் பிறகு காங்கிரஸ் சாா்பில் 4 முறை எம்.பி.யாக இருந்தாா். பின்னா் 2004-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவா், மீண்டும் மக்களவை எம்.பி.யாகத் தோ்வானாா். அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு காங்கிரஸுக்குத் திரும்பினாா்.

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க