செய்திகள் :

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

post image

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு அரசியலுக்கு தகுதியற்றவர் என சித்தரிக்கும் விதமாக பாஜகவினர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக அரசு அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார். அப்போது, “ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றதாக நான் கேள்விப்பட்டேன்.

புத்தாண்டு தொடக்கத்தின்போது ராகுல் காந்தி வியட்நாமில் இருந்தார். அங்கு 22 நாள்கள் தங்கியிருந்தார். அவருடைய சொந்தத் தொகுதியில் கூட அவர் இவ்வளவு நாள்கள் தங்கியதில்லை. திடீரென வியட்நாம் மீது அவருக்கு இந்தளவு விருப்பம் வரக் காரணம் என்ன?

இதையும் படிக்க | அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கவேண்டும். வியட்நாம் மீது அவர் கொண்டுள்ள அளவில்லா பாசம் குறித்து அவர் விளக்கம் தர வேண்டும். அங்கு அவர் தொடர்ந்து செல்வது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது” என்று பேசினார்.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரான அமித் மால்வியா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ராகுல் காந்தி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அதன் விவரங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தி ஒரு முக்கிய பதவியை வகிக்கிறார். அவர் அடிக்கடி மேற்கொள்ளும் ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள் குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அவர் இவ்வாறு சென்றிருப்பது நாட்டின் பாதுகாப்பு பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது” எனப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணங்களை அரசியலாக்குவது குறித்து குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி ஒரு தனிநபராக அவருக்கு வெளிநாடு செல்ல உரிமை உண்டு என்று கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் 26 அன்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கின் மறைவைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் பாஜகவின் விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க