செய்திகள் :

ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?

post image

குஜராத் மாநிலத்தில் உள்ள 10 சிறிய முகம் தெரியாத கட்சிகள் 2019-20 மற்றும் 2023-24 கால கட்டத்தில் ரூ.4300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான ஊடக அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்திலாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா அல்லது பிரமாணப் பத்திரம் கேட்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையம்

இந்த காலகட்டத்தில் இந்த கட்சிகள் 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் வெறும் 43 வேட்பாளர்களை நிறுத்தி 54,069 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறுகின்றன.

தேர்தல் அறிக்கையின்படி இந்தக் கட்சிகள் ரூ.39.02 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், ஆனால் வருடாந்திர நிதி தணிக்கையில் ரூ.3500 கோடி எனக் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி - பீகார் யாத்திரை

"இந்த கட்சிகள் மிகக் குறைவாகவே தேர்தலில் போட்டியிட்டிருக்கிறன, செலவு செய்திருக்கின்றன. இவர்கள் பெயரையே யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் ஆனால் 4300 கோடி நன்கொடை பெற்றுள்ளனர்." என இந்தியில் எழுதிய பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அத்துடன், "இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? அவற்றை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது? இதையாவது தேர்தல் ஆணையம் விசாரிக்குமா - அல்லது இங்கேயும் பிரமாணப் பத்திரம் கேட்குமா? அல்லது சட்டத்தை மாற்றி தரவுகள் மறைக்கப்படுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் ராகுல் காந்தி 'வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் மூலம் வாக்குகள் திருடப்படுவதாக' தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் வைத்து யாத்திரை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன் பகவத் சொன்ன பதில்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது. இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலள... மேலும் பார்க்க

UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் - சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிக... மேலும் பார்க்க

`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,01,800 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர... மேலும் பார்க்க

'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ... மேலும் பார்க்க

`விஜய் வருகை பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை' - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயல... மேலும் பார்க்க

கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?

மனம் வெதும்பும் மீசைத் தலைவர்!“கூட்டணியில் இருந்து என்ன பயன்?”தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவே... மேலும் பார்க்க