செய்திகள் :

ராகுல் பிறந்தநாள்! காங்கிரஸ் முன்னெடுப்பால் 8,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

post image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 3,500 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்தநாளையொட்டி, தில்லியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

மேலும், வேலைவாய்ப்புகளைப் பெற, 8,500 பேர் பதிவு செய்ததாகவும், அவர்களில் 7,500 பேர் முகாமில் பங்கேற்றதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, பங்கேற்றவர்களில் 3,500 பேருக்கு முகாமிலேயே நியமனக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட சுற்று நேர்காணலுக்கும் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்

நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகையில், இந்த நிகழ்வு, ஒரு தேர்தல் பேரணியோ மதக் கூட்டமோ அல்ல. இது வேலைதேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கூட்டம்.

வேலைவாய்ப்பின்மை மீதான இளைஞர்களின் விரக்திக்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது.

முகாமில் பங்கேற்றவர்கள், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள் படித்தவர்கள், ஆனால் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள்.

இவர்களில் பலருக்கும், கடந்த 11 ஆண்டுகளில் நடத்தப்படும் முதல் வேலைவாய்ப்பாகக் கூட இருக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த வேலைவாய்ப்பு முகாமில் அரசு வேலைகளும் கிடைக்கப் பெறலாம் என்று கூறினர்.

இதையும் படிக்க:கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க