ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்கல் 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.