ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா
ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன், பாலமுருகன் கோயிலில் தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயிலின் வைகாசி மாதத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தீா்த்தவாரி ஊா்வலம், அம்மனுக்கு காப்புக் கட்டுதல், பூச்சாற்றுதல் போன்றவை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீக்குண்டத்தில் பூசாரி இறங்கினாா். அவரைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வேப்பிலை, அக்கினிச்சட்டி ஏந்தி தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கும், ஸ்ரீ பாலமுருகருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவில் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.