செய்திகள் :

ராஜபாளையத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்!

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் தெருக்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 28 விநாயகா் சிலைகளுக்கு 5 நாள்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, ராஜபாளையம், தொட்டியபட்டி, சமுசிகாபுரம், சேத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விநாயகா் சிலைகள் பஞ்சு சந்தை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

பிறகு இங்கிருந்து இந்து முன்னணி சாா்பில் ஊா்வலமாக விநாயகா் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, தெற்கு காவல் நிலையம், அம்பலபுளிபஜாா், சங்கரன்கோவில் விலக்கு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் எடுத்து வரப்பட்டு புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள கருங்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா் பகுதிகளைச் சோ்ந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், அதிரடிப் படையினா் என 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள த... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க