செய்திகள் :

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் கடைசி மகன் அலெக்ஸ் பாண்டியன் மாற்றுத்திறனாளி. அவரைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் அய்யாசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிழைப்புக்காகப் பசுமாடு வளர்த்து தொழில் செய்துவந்தார் சுந்தராம்பாள்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பசுமாட்டின் தீவனத்திற்குப் புல் அறுப்பதற்காக அப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தன் மகனுடன் சுந்தராம்பாள் சென்றுள்ளார். பங்களா காடு எனும் பகுதியில் கிடைத்த புற்களை அறுத்து எடுத்துக்கொண்டு மாட்டுக்குத் தீவனம் வைப்பதற்காக அலெக்ஸ் பாண்டியன் கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார்.

பலி

இந்நிலையில், மீண்டும் காட்டுப்பகுதிக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, தனது தாய் சுந்தராம்பாள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்தவர்களை அலெக்ஸ் பாண்டியன் உதவிக்கு அழைத்துள்ளார். அவரின்‌ கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் இருவரையும் மீட்டுப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் சுந்தராம்பாள் இறந்த கிடந்த இடத்தில் ஆய்வுசெய்ததில் காட்டெருமை வந்து சென்றதற்கான தடயங்கள், காலடித் தடங்கள் இருந்துள்ளன. இதுதவிர சுந்தராம்பாள் உடலில் பல்வேறு இடங்களிலும் மாடு முட்டியதற்கான ரத்தக்காயங்களும் வீக்கங்களும் இருந்துள்ளன.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த சேத்தூர் போலீஸார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். மேலும் சுந்தராம்பாள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்... மேலும் பார்க்க

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க