செய்திகள் :

ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி விடுவிப்பு!

post image

ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போர் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எல்லையோர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிக்க: 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!

அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்தும், மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பார்மெர், ஜெய்சால்மர், பிக்கானர் மற்றும் ஸ்ரீகங்காநகருக்கு தலா ரூ. 5 கோடி விடுவித்தும் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பஜன்லால் சர்மா கூறியதாவது: எங்களது மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், ராஜஸ்தான் மிகவும் முக்கிமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த அவசரநிலையில் நாம் அனைவரும் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்றார்.

இதையும் படிக்க: களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நிதியுதவியாக எல்லையோர மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான உணவு, மருத்துவ சேவை, குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறிய... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரேல் அறிவுரை

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குட... மேலும் பார்க்க

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்’ என்று சீனா வலியுறுத்தியது. ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் உள்பட எ... மேலும் பார்க்க