செய்திகள் :

ராஜஸ்தானில் மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலி

post image

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலை குழாய் பதிக்க தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

பன்னிரண்டு தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கினர். அலறல் சத்தம் கேட்டதும், மற்ற தொழிலாளர்கள் மற்றும் திட்ட ஊழியர்கள் மீட்பு முயற்சிகளைத் தொடங்கினர். ஆனால் மண்ணின் ஆழம் மற்றும் கனத்தன்மை உடனடி மீட்பு முயற்சிகளை கடினமாக்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்தன. மீட்புக் குழுக்கள் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை அகற்றி சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ஆறு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் நான்கு பேர் பலியாகினர். மேலும் இருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஐந்து பேர் இன்னும் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணி நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டனர். ஜங்கி கா நக்லா கிராமத்திற்கு அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

According to officials, some labourers were filling a 10-foot-deep trench dug to lay a pipeline, when the soil caved in. A total of twelve workers got trapped under the soil.

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை: விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு

கேரள தலைநகா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லை என்றும், இதனால், அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருவதாகவும் மூத்த அரசு மருத்துவா் ஒருவா் புகாா் ... மேலும் பார்க்க

தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ... மேலும் பார்க்க

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்ப... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.இந்த விழாவில்... மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது. ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்ந... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க