செய்திகள் :

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

post image

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை.

டயாலிசிஸ் பிஸ்துலா அறுவை சிகிச்சைக்காக ஜெகதீஷ் என்ற வாலிபர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு காத்திருந்தார்.

Hospital

இந்நிலையில், இதே கோட்டா பகுதியைச் சேர்ந்த மனிஷ் என்பவர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை எடுக்க இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தனர். மனிஷுக்குத் துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் என்பவர் மருத்துவமனையில் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஆபரேஷன் உதவியாளர்கள் ஜெகதீஷ் என்ற நோயாளியை அழைக்க, ஆபரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருந்த மணிஷ்ஷின் தந்தை ஜெகதீஷ், தன்னைத்தான் அழைப்பதாக நினைத்து கையை உயர்த்த, அவரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று அவரது கையில் பிஸ்துலா அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர்.

தனக்குப் பதிலாக தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை துவங்கியதை அறிந்த மகன் மனிஷ், மருத்துவர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். பின்னர், அவரின் தந்தை ஜெகதீஷ் தையல் போடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

பின்னர் மணிஷ்க்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் , இன்னொரு ஜெகதீஷுக்கு பிஸ்துலா சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.

அறுவை கிகிச்சையில் நடந்த இந்த குழப்பம், ராஜஸ்தான் மீடியாக்களில் இடம் பிடிக்க, மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தவறுக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

மகனின் அறுவை சிகிச்சைக்காகத் துணைக்குப் போன தந்தைக்கு ஆறு தையல் போடப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் வைரல் ஆகியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க

Anurag Kashyap: `அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்கவில்லை எனில்..!’ - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந... மேலும் பார்க்க

தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது. மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையான... மேலும் பார்க்க

Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" - அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச்... மேலும் பார்க்க

கார் 4 கோடி; நம்பர் 46 லட்சம் - கேரளாவை அசரவைத்த CEO; பின்னணி என்ன?

லிட்மஸ் சிஸ்டம்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் வேணு கோபாலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர். சமீபத்தில் இவர், கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நம்பர் பிளேட்டை ... மேலும் பார்க்க

`போலி பனீர்' ஷாருக்கான் மனைவி நடத்தும் உணவகத்தில் கலப்படம்? -யூடியூபர் புகார்; கெளரி கான் விளக்கம்

மும்பையில் பிரபலங்கள் நடத்தும் ரெஸ்டாரண்ட்மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ... மேலும் பார்க்க