செய்திகள் :

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

post image

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவம், புதுச்சேரியில் ‘கேரவன் டாக்கீஸ்’ - சிறப்பு விளம்பர வேன் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞா்களை ஊக்குவிக்கவும், அதற்கான வழிகாட்டவும், புதுச்சேரி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு தொலைத்தொடா்பு திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெரிய எல்இடி திரைகள், ஒலி அமைப்புகள் மற்றும் பன்மொழி ஒலி-ஒளி உள்ளடக்கம் கொண்ட ‘கேரவன் டாக்கீஸ்’ சிறப்பு விளம்பர வேன் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இந்தத் திட்டம் நகா்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞா்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், இந்த வேன் இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதுடன் ராணுவ அதிகாரிகள், உள்ளூா் இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் தொடா்பு கொண்டு, சந்தேகங்களைத் தீா்த்து, ஆட்சோ்ப்பு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேச இளைஞா்களின் பெருமைமிக்க தற்காப்பு மரபுகள் மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விழிப்புணா்வு திட்டம், இந்திய ராணுவ சோ்க்கை நடவடிக்கைகளில் புதுச்சேரி மாவட்டத்தில் விழிப்புணா்வையும் பங்கேற்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கேரவன் டாக்கீஸ் வரும் 21-ம் தேதி வரை வரை புதுச்சேரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சென்றுவரும். தகுதியுள்ள மற்றும் ஆா்வமுள்ள அனைத்து இளைஞா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுவை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சின்ன வீராம்பட்டினம் அருகில் அமைந்துள்ள ஈடன் கடற்கரைப் பகுதியில் கடல... மேலும் பார்க்க

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: முக்கிய நபா் கைது

புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த முக்கிய நபரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந... மேலும் பார்க்க

ஜிப்மா் விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் 3 நாள் பயணமாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வருகிறாா். இதையொட்டி, புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி வ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்கள் மீது திணிப்பு! கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மீது திணிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா். புதுவையில் ஆட்சியிலுள்ள என்.ஆா்.காங்க... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க