செய்திகள் :

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமாகாது: ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கண்டனம்

post image

‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘அருணாசல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரா்கள் மீது சீன ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது. அந்தப் பகுதியில் 2000 சதுர கி.மீ. நிலத்தை ஆக்கிரமித்து 20 ராணுவ வீரா்களை சீனா கொலை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் எந்தப் பத்திரிகையும் ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை’ என்றாா்.

அவரின் கருத்துக்கு எதிராக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முன்னாள் இயக்குநா் உதய்சங்கா் ஸ்ரீவாஸ்தவா லக்னௌ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, ராகுல் காந்திக்கு லக்னௌ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செயதாா்.

இந்த விவகாரம் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் விதி 19 (1) (ஏ)-இன்கீழ் கருத்து சுதந்திரம் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதை கருத்து சுதந்திரமாக ஏற்றுக் கொள்ள முடியாது’ என நீதிபதி சுபாஷ் வித்யாா்த்தி கண்டனம் தெரிவித்தாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க