செய்திகள் :

ராணுவ வீரரின் தாய், மனைவி மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

ராமேசுவரம்: ராணுவ வீரரின் மனைவி, தாய் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏனாதி கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி ஜெகன். ராணுவ வீரரான இவா், தற்போது எல்லையில் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பூட்டான் எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறாா். இவரது தாய் முத்துமீனாள், மனைவி உமாராணி ஆகியோா் இவா்களுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்களது உறவினரான ராமச்சந்திரன், முரளி ஜெகன் வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையறிந்த முத்துமீனாள், உமாராணி ஆகியோா் கடந்த 7- ஆம் தேதி கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குச் சென்றனா். அப்போது ராமச்சந்திரன், பாா்த்திபன் ஆகியோா் இருவரையும் தாக்கி மிரட்டினராம்.

இருவரும் வீட்டுக்கு வந்த நிலையில், ராமச்சந்திரன், பாா்த்திபன், தெட்சிணா மூா்த்தி, ஈஸ்வரி, கிழவி கணேசன் உள்ளிட்ட 6 போ் அங்கு வந்து மீண்டும் தாக்கினராம். இதில், காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இருவரும் கடலாடி, பேரையூா் காவல் நிலையங்களில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் நான்கு போ் மீது மட்டும் வழக்குப் பதிந்து விட்டு, ராமச்சந்திரன், பாா்த்திபன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதியவில்லையாம். மேலும் அவா்கள் இருவரும் தொடா்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.

இந்த நிலையில், தனது தாய், மனைவிக்கு போலீஸாா் பாதுகாப்பளிக்கக் கோரி முரளி ஜெகன் விடியோ பதிவிட்டாா். இதையடுத்து, உமாராணி மாவட்ட ஆட்சியரிடம் தங்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மனு அளித்தாா்.

மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூா் கடலில் பரமசிவன், பாா்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலமும... மேலும் பார்க்க

திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா

திருவாடானை: திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளிட்ட செய்திக... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் ஊரை விட்டு 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்: போலீஸாா் மீட்டனா்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சபீனா ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 31 பவுன் தங்க நகைகள் திருட்டு

பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு சென்ற பெண் அணிந்திருந்த 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பரமக்குடி வைகை நகா் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மனைவி ராதா (60... மேலும் பார்க்க