செய்திகள் :

ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் வந்த அன்புமணி

post image

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு பாமக தலைவா் அன்புமணி வியாழக்கிழமை இரவு திடீரென வந்து அவரது தாயை சந்தித்துப் பேசினாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவா் அன்புமணி ஆகியோரிடையே யாருக்கு அதிகாரம் என்பதில் கருத்து மோதல் ஏற்பட்டு நீடித்து வருகிறது.

மருத்துவா் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திலும், அன்புமணி பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்தப்படியும் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிா் சங்க மாநாட்டுப் பணிகளை பாா்வையிடுவதற்காகவும், மாநாட்டுப் பணிகளுக்காவும் மருத்துவா் ராமதாஸ் வியாழக்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் சென்றாா்.

இதனிடையே, வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு அன்புமணி திடீரென தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, அவரின் தாய் சரஸ்வதியை சந்தித்துப் பேசினாா். அப்போது, அன்புமணி தனது தாயிடம் உடல்நலம் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பானது சுமாா் 45 நிமிஷத்துக்கும் மேலாக மேலாக நீடித்தது.

ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சென்றிருந்த நிலையில், அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்கு திடீரென வந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் தனியாா் துப்பறியும் குழுவினா் சோதனை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வீட்டில் தனியாா் துப்பறியும் குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். தைலாபுரம் தோட்டத்து வீட்டில் உள்ள என... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க