செய்திகள் :

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி!

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தைலாபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பை ஒத்திவைத்துவிட்டு, சென்னைக்கு ராமதாஸ் புறப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ராமதாஸின் ஆதரவாளர்களாக பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ அருள் ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வரும் ராமதாஸ் மூன்று பேரையும் நேரில் சந்தித்து நலம்விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், சேலத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ... மேலும் பார்க்க

பெண் கோட்டாட்சியர் விபத்தில் பலி: ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை, ரூ. 15 லட்சம் நிதியுதவி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பலியான முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடை... மேலும் பார்க்க

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.இந்நில... மேலும் பார்க்க