செய்திகள் :

ராமநாதபுரம்: கார் - வேன் மோதல்; ஐ.டி. ஊழியர், 13 வயது சிறுமி பலியான சோகம்; என்ன நடந்தது?

post image

கடலூர் மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், வேன் ஒன்றில் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

இவர்கள் ராமேஸ்வரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நதிப்பாலம் அருகே ஒருவரை ஒருவர் முந்த முயன்றுள்ளனர்.

விபத்துக்குள்ளான வேன்

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், காரின் மீது மோதிய வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த கூடலூரைச் சேர்ந்த சிறுமி மகாலட்சுமி (13) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதே போல் காரில் பயணம் செய்த கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷ் (27) என்பவரும் இடிபாடுகளில் சிக்கிப் பலியானார். மேலும் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலீஸார் மற்றும் ராமநாதபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

பின்னர் அவர்களைச் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய கார்

கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷிற்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, தனது நண்பர்களுடன் இன்று அதிகாலை ராமேஸ்வரம் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கோழிக்கோடு கப்பல் விபத்து: தானாகத் தீப்பிடிக்கும் ரசாயனங்கள்; அதிகாரிகள் சொல்வது என்ன?

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற வாங் ஹை 506 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு பேப்பூர் துறைமுகத்திலிருந்து 78 நாட்டிக்கல் மைல் தொலைவில் இன்று காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.அப்ப... மேலும் பார்க்க

கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர்கடற்கரையில் சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது. தீ பிடித்த சரக்கு கப்பலிலிருந்து சுமார் 22 பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை இறங்கியுள்ளது. 650... மேலும் பார்க்க

ரயில் கிளம்பிய போது ஓடி வந்து ஏற முயன்ற இளம்பெண்; தவறியதால் கால் துண்டான பரிதாபம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நீலா (வயது: 27). இவர், நேற்று (ஜூன்-8) மதியம் 2 மணியளவில், சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும... மேலும் பார்க்க

மும்பை: ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் - 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி ரயிலில் வாசலில் நின்று பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அத... மேலும் பார்க்க

Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்துவமனையில் விமானி

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் புனித தளத்துக்குச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானி சிக்கலான சாலையில் ஆபத்தான முறையில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

மும்பை: மலை பயணம்; 40 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த கார்.. 3 பேர் உடல்கள் மீட்பு - நடந்தது என்ன?

மும்பையைச் சேர்ந்த பிரவின்(27), யாக்னேஷ்(27), ராஜ்போலி ஆகியோர் நாசிக் அருகில் உள்ள திரிம்பகேஷ்வர் சிவன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோத... மேலும் பார்க்க