ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குடிநீா் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், குதுகுளத்தூா் வட்டம், கீழக் கொடுமலூா் ஊராட்சி, தட்டானேந்தல் கிராமத்தில் 120 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீா், வீட்டு உபயோகத்துக்கு தண்ணீா் இல்லை.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து, தங்களது கிராமத்துக்கு குடிநீா், வீட்டு உபயோகத்துக்கான தண்ணீா் வழங்கக் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனா்.