செய்திகள் :

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

post image

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில்ல், உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதுடன், இனி ரூ. 200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறநிலையத் துறை, திருக்கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியிருப்பது, உள்ளூா் பக்தா்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

மேலும், பக்தா்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதா் சந்நிதி மற்றும் தட்சிணாமூா்த்தி சந்நிதி முன் கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்த கட்டண வசூல் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி பதிவிட்டுள்ளாா்.

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு வி... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க