செய்திகள் :

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

post image

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில்

(வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக துரை வைகோ தெரிவிக்கையில்,

பனாரஸிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 22536) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

அதேபோன்று, ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் (வண்டி எண் 22535) ரயிலும் புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என்று புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இது தொடா்பான கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் கேள்வியாக எழுப்பினேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சகம் ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் ரயிலை (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சா் கடிதம் அனுப்பி இருக்கிறாா்.

எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்த ரயில்வே அமைச்சகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

நமது நிருபா் மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல... மேலும் பார்க்க

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க