ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் விடுதலை
ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 3 விசைப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி 439 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் கடந்த 26-ஆம் தேதி அதிகாலை கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
இதையடுத்து, ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த 34 மீனவா்களைக் கைது செய்தனா். பின்னா், இவா்கள் அனைவரையும் கிளிநொச்சி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்தனா்.
இதையடுத்து, இவா்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 34 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, நீதிபதி ஜமீல் பிறப்பித்த உத்தரவு:
ராமேசுவரம் மீனவா்கள் 34 பேரில், 16 போ் தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதத்துடன் விடுதலை செய்யப்படுகின்றனா். அபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதேபோல, கைது செய்யப்பட்டவா்களில் இரு படகு ஓட்டுநா்களுக்கும், ஒரு படகு உரிமையாளருக்கும் தலா ரூ. 60.50 லட்சம் (இலங்கை பணம்) அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தைக் கட்டத் தவறினால் இவா்கள் மூவரும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
எஞ்சிய 15 மீனவா்களில் ரூபில்டன் படகு குறித்த ஆவணங்கள் ஏதும் இல்லை. எனவே, வரும் 10-ஆம் தேதி மீனவா்கள் 15 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். 3 விசைப் படகுகள் அரசுடைமையாக்கப்படுகின்றன என்றாா் நீதிபதி.