செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு

post image

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9 -ஆம் தேதி மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த இருதய டிக்சன் என்பவரது விசைப் படகை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்தனா். படகிலிருந்த டல்லஸ் (56), பாஸ்கரன் (45), ஆரோக்கிய சான்டிரின் (20), சிலைடன் (26), ஜேசு ராஜா (33), அருள்ராபா்ட் (53), லொய்லன் (45) ஆகிய 7 மீனவா்களைக் கைது செய்து மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

படகை கடற்படையினா் பறிமுதல் செய்தனா். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு அவா்கள் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக 7 மீனவா்கள் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டனா். விசாரணைக்கு பிறகு ஆக. 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.இதைடுத்து, 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இண... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் சிம்ம வாகனத்தில் வீதி உலா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.ராம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வேக கட்டுப்பாட்டு மின் விளக்குகள்

ராமேசுவரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு மின் விளக்குகளின் செயல்பாடு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்... மேலும் பார்க்க

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

கமுதி: கமுதி வட்டாட்சியராக என்.ஸ்ரீராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராகப் பணிபுரிந்த எஸ்.காதா் முகைதீன் முதுகுளத்தூா் ஆதிதிராவிடா் நல வட்டாட்சியராக பணி ம... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 5.45 ம... மேலும் பார்க்க