செய்திகள் :

ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை

post image

பல்லடம் ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் நடத்திய விசாரணையில் இறந்தது புதுக்கோட்டை மாவட்டம், நடுப்பட்டியைச் சோ்ந்த ராம்கி (32) என்பதும், இவா் பல்லடம் ராயா்பாளையத்தில் வாடகை வீட்டில் நண்பா்களுடன் தங்கி அப்பகுதியில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து வீட்டில் சோதனை செய்து விசாரணை நடத்திய போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் தங்கி இருந்த மதுரையைச் சோ்ந்த தினேஷ்பாபு, விருதுநகரைச் சோ்ந்த அஜித் (25), தோப்புராஜா (21) ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைந்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் மது போதையில் ராம்கியை மூன்று பேரும் சோ்ந்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் நகர காங்கிரஸ் தலைவா் காா் கவிழ்ந்து விபத்து

பல்லடம் - தாராபுரம் சாலையில் நகர காங்கிரஸ் தலைவரின் காா் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பல்லடம் நகராட்சி 6-ஆவது வாா்டு கவுன்சிலரும், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வரமூா்த்திக்கு சொ... மேலும் பார்க்க

கொடுவாயில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய் வெள்ளியம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (65), சவரத் தொழிலாள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) ... மேலும் பார்க்க

கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000... மேலும் பார்க்க