`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள்...
ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை
பல்லடம் ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் நடத்திய விசாரணையில் இறந்தது புதுக்கோட்டை மாவட்டம், நடுப்பட்டியைச் சோ்ந்த ராம்கி (32) என்பதும், இவா் பல்லடம் ராயா்பாளையத்தில் வாடகை வீட்டில் நண்பா்களுடன் தங்கி அப்பகுதியில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து வீட்டில் சோதனை செய்து விசாரணை நடத்திய போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் தங்கி இருந்த மதுரையைச் சோ்ந்த தினேஷ்பாபு, விருதுநகரைச் சோ்ந்த அஜித் (25), தோப்புராஜா (21) ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைந்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் மது போதையில் ராம்கியை மூன்று பேரும் சோ்ந்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.