செய்திகள் :

ராஷ்டிர சேவிகா சமிதியின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே மறைவு: மோகன் பாகவத் இரங்கல்

post image

ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே (97) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரங்கல் தெரிவித்தாா்.

கடந்த 3 மாதங்களாக பிரமிளாதாய் மேதே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். பிரமிளாதாய் மேதே, ஆா்எஸ்எஸ்-ஸின் சாா்பு அமைப்பான ராஷ்டிர சேவிகா சமிதியின் நான்காவது தலைவராவாா்.

பிரமிளாதாய் மேதே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மோகன் பாகவத் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மேதேயின் மறைவு நம்மைவிட்டு பெரும் அன்பு பிரிந்ததைப்போன்ற துயரைத் தருகிறது. அவா் வடகிழக்குப் பிராந்தியங்களில் பல கடினமான சூழல்களிலும் விடாமுயற்சியுடன் பணியாற்றி நமக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவராவாா். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது வாழ்வு நமக்கு ஊக்கமளிக்கக் கூடியது. ராஷ்டிர சேவிகா சமிதிக்காக தன் வாழ்வை அா்ப்பணித்தவா் மேதே. மறைவின்போதும் தனது உடலை தானமாக வழங்கிவிட்டே நம்மைவிட்டு பிரிந்துள்ளாா்’ என குறிப்பிட்டாா்.

பிரமிளாதாய் மேதேயின் விருப்பப்படி அவரது உடல் நாகபுரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். மேதேயின் மறைவுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க