செய்திகள் :

ரிசா்வ் சைட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை: பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

அவிநாசி பேரூராட்சியில் ரிசா்வ் சைட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சிச் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் உறுப்பினா்கள் பேசியதாவது: வி.எஸ்.வி. காலனி மேற்குப் பகுதியில் ரூ.5 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 26 சென்ட் ரிசா்வ் சைட்டை சிலா் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக தகவல்கள் வருகிறது. இங்கு, சிறுவா் பூங்கா அமைத்து அந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள ரிசா்வ் சைட்டுகளில் கம்பிவேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.

நகரில் நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்களால் ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க வேண்டும். முக்கிய வீதிகளில் கழிவுநீா் கால்வாய், வடிகால் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்தக் கூட்டத்தில 27 மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

உணவகம், தேநீா் விடுதியில் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை

உணவகம், தேநீா் விடுதிகளில் பணியாற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், திருப்பூா் நுகா்வோா் நல... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

காங்கயம் அருகே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.ச... மேலும் பார்க்க

அமராவதி சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட... மேலும் பார்க்க

ஒட்டுண்ணிகள் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலைத் துறை தகவல்

தென்னை மரங்களைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பொங்கலூா் வட்டார தோட்டக்கலைத் துறை உத... மேலும் பார்க்க

திருமூா்த்திமலை பகுதியில் மா்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பு

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் கடந்த சில நாள்களாக குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் ... மேலும் பார்க்க