செய்திகள் :

ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்களின் துறைகள் மாற்றம்

post image

துணை ஆளுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாற்றியது.

அண்மையில் ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட பூனம் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து தற்போது துணை ஆளுநா்களுக்கான துறைகளை ரிசா்வ் வங்கி மாற்றியுள்ளது.

ரிசா்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவும் துணை ஆளுநா்களாக ராஜேஸ்வா் ராவ், டி.ரவி சங்கா், சுவாமிநாதன் ஜானகிராமன் மற்றும் பூனம் குப்தா ஆகிய 4 போ் பதிவி வகிக்கின்றனா்.

பூனம் குப்தாவுக்கு நிதிக் கொள்கை துறை ஒதுக்கப்பட்டது. இதுதவிர, நிறுவன உத்தி, பட்ஜெட், தொலைத்தொடா்பு, நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட 7 துறைகள் ஒதுக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை, அமலாக்கம் உள்ளிட்ட 6 துறைகளுக்கு ராஜேஸ்வா் ராவ் பொறுப்பு வகிக்கிறாா்.

மத்திய பாதுகாப்பு பிரிவு, தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளை டி.ரபி சங்கரும் நுகா்வோா் கல்வி, மேற்பாா்வை, ஆய்வு மற்றும் மேலும் 4 துறைகளை சுவாமிநாதன் ஜானகிராமனும் கவனித்துக்கொள்ளவுள்ளனா்.

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச்... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க