செய்திகள் :

ரூ. 1,600 கோடி ஆலை; முத்தையா முரளிதரனுக்கு ஜம்மு காஷ்மீரில் இலவச இடம்?!; கிளம்பிய எதிர்ப்பு

post image

ஜம்மு காஷ்மீரில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவன (Ceylon Beverage Can Pvt Ltd) ஆலை அமைக்க ஜம்மு காஷ்மீரில் இலவசமாக இடம் ஒதுக்கிய விவகாரம் சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஜூன் மாதம், கதுவா பாக்தாலி தொழிற்பேட்டையில் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1,600 கோடியில் பாட்டில் நிரப்புதல் மற்றும் அலுமினிய கேன்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் நேற்று சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கேள்வி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய் தாரிகாமி, ``இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது?’’ என முத்தையா முரளிதரனின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வியெழுப்பியனார்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

அதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், ``இந்தியர் அல்லாத கிரிக்கெட் வீரருக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும்." என்றார். பின்னர் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த விவசாய அமைச்சர் ஜாவேத் அஹ்மத் தார், ``இது வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட விஷயம். எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மை நிலவரத்தை அறிய ஆய்வு செய்வோம்." என்றார்.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கழிவறை... பொதுமக்களும் பயன்படுத்தலாம்! - வைரல் வீடியோவும் சட்ட விளக்கமும்!

‘நீங்க இப்ப சென்னை மவுன்ட் ரோட்டுல போய்க்கிட்டிருக்கீங்க. திடீர்னு உங்களுக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய அவசரமான சூழல். பக்கத்துல பொதுக் கழிப்பறை எதுவும் இல்லை. சுத்திப் பார்த்தா பக்கத்துல ஐடிசி கிராண்ட் ... மேலும் பார்க்க

வேளாண் தனி நிதிநிலை அறிக்கை... வெத்து வேட்டாகவே இருக்கும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘‘தி.மு.க அரசுதான் தமிழ்நாட்டில், முதன்முறையாக வேளாண் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைத் தாக்கல் செய்தது’’ என்று கடந்த நான்கு ஆண்டுகளாகவே பெருமை பேசிவருகிறார், தமிழ்நாடு வேளாண்த... மேலும் பார்க்க

`இனி GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம்' - மக்களே ஒரு குட் நியூஸ்!

இனி பயனாளர்கள் யுபிஐ மூலமே தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இதனால் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக ஜிபே... மேலும் பார்க்க

Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்படும்... மேலும் பார்க்க

``என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு'' - சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினே... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; மீன் மார்க்கெட் வளாக மேடைக்கடைகள் சீரமைப்பு பணியிலிறங்கிய அதிகாரிகள்

வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் க... மேலும் பார்க்க