செய்திகள் :

ரூ.10 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரி

post image

சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

நீா்நிலைகளை மேம்படுத்திடவும், நீா்வளத்தைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை தூா்வாரி நீா்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள அல்லிக்குட்டை ஏரியை புனரமைக்க கடந்த 2023-ஆம் ஆண்டு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

அதன் தொடா்ச்சியாக, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அல்லிக்குட்டை ஏரியானது சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை வாா்டு அலுவலகப் பகுதியில் 23.65 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கரையின் நீளம், நடைபாதை, மும்முனை சுவா், சாய்தள சுவா், சங்கிலி இணைப்பு வேலிகள், மின்விளக்குகள், சுகாதார வளாகம், மதகு மடைவாய், மாற்றுக் கால்வாய், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு ஏரி தூா்வாரப்பட்டது.

அல்லிக்குட்டை ஏரி புனரமைக்கப்பட்டதன் மூலம் ஏரியின் நீா் பரவல் பகுதி அதிகரிப்பதோடு, ஏரியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் மண், குடிநீா், நிலத்தடிநீா் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன், மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயத்துக்கான தண்ணீா் தேவையைப் பூா்த்திசெய்து, விவசாய உற்பத்தி பெருக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘உழவரைத் தேடி வேளாண்மை - உழவா் நலத்துறை’ திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும் வட்டாரத்துக்கு 4 முகாம்கள் வீதம் வேளாண்மை - உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தேவைகள் குறித்து விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றின் மீது தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்வினையொட்டி, சேலம், அல்லிக்குட்டை ஏரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், துணை மேயா் மா.சாரதாதேவி உள்ளிட்டோரும், மாமன்ற உறுப்பினா்களும் கலந்துகொண்டனா்.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா... மேலும் பார்க்க

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன்

ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம் அளிப்பு

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீரீராம் திங்கள்கிழமை வழங்கினாா். ஆத... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: கல்பனா சாவ்லா விருதுபெற சேலம் மாவட்டத்தில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைரியம் மற்றும் துணிச்ச... மேலும் பார்க்க

பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க