தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையா் நியமனம்
ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரா் மகேந்திரசிங் தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஜி.ஜெயஸ்ரீ என்பவரை வழக்குரைஞா் ஆணையராக நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததா? என்பது குறித்து தனியாா் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி ஈடுபட்டதாக கூறினாா்.
இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா், தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியோரிடம் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு தோனி வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை நீதிபதி சி.வி. காா்த்திகேயன் விசாரித்து வருகிறாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. எனவே சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும்.
இதற்காக தோனி சாட்சியம் அளிக்க உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்துக்கு வந்தால், பாதுகாப்பு பிரச்னை ஏற்படும்.எனவே அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமித்து, சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தோனி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்குரைஞா் ஆணையரை விரைவில் நியமிப்பதாக கூறியிருந்தாா்.
இந்தநிலையில்,தோனியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்குரைஞா் ஜி.ஜெயஸ்ரீ என்பவரை வழக்குரைஞா் ஆணையராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டாா். அந்த உத்தரவில், தோனியிடம் அக். 20-ஆம் தேதி முதல் வழக்குரைஞா் ஆணையா் ஜெயஸ்ரீ சாட்சியத்தைப்பதிவு செய்யலாம். இதற்காக அவருக்கு முதல் கட்டமாக ரூ.30,000 கட்டணமாக தோனி வழங்கவேண்டும். தோனியிடம் சாட்சியத்தை பதிவு செய்வதற்கு முன்பு எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அதை தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.