செய்திகள் :

ரூ.2 ஆயிரம் கடனுக்காக இளைஞர் கொலை: தில்லியில் அதிர்ச்சி!

post image

தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஃபர்தீன் என்பவரிடமிருந்து ஆதில் ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று ஃபர்தீன், ஜாவேத் ஆகியோர் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது அந்தவழியாக வந்த ஆதிலியின் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ஆதில் கோபமடைந்து கத்தியை எடுத்து இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஃபர்தீன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை அவரது தந்தையால் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார். இதையடுத்து காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார்.

கத்திக் குத்து சம்பவம் நிகழும்போது ஆதிலின் சகோதரர் கமில் மற்றும் அவரது தந்தை ஷகீல் ஆகியோரும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், தாக்குதல் நடத்தத் தூண்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஆதிலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதிலை பிடிக்கவும், குற்றத்திற்கான ஆயுதத்தை மீட்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

A 23-year-old man was stabbed to death allegedly by a local resident in northeast Delhi's Jafrabad area following a dispute over a Rs 2,000 loan, an official said on Thursday.

இதையும் படிக்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க