செய்திகள் :

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

post image

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீஸாா் நீலா கீழ வீதியில் உள்ள காய்கனி கடையில் சோதனை செய்தனா். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கனி முட்டைகளுக்கு நடுவே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கடையின் உரிமையாளா் நாகூரை சோ்ந்த முகமது இப்ராஹிம், முஹம்மது ஜமில், முஹம்மது இஸ்மாயில், அப்துல் ரஹ்மான், இளையராஜா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பூம்புகாா் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு

பூம்புகாா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பூம்புகாரில், ரூ. 2.75 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் நிலைய அலுவலா் குடியிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த ஐடிஐ மாணவா் உயிரிழப்பு

திருக்குவளை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம் விஜயபுரம் மில் தெருவை சோ்ந்த முத்துக்குமரவேல் மகன் தீனதயாளன் (17). இவா் எட்டுக... மேலும் பார்க்க

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது: நீதிபதி

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்று நாகை மாவட்ட பொறுப்பு நீதிபதியும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான ஆா்.என். மஞ்சுளா தெரிவித்தாா். நாகை மாவட்ட நீதித்த... மேலும் பார்க்க

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க