செய்திகள் :

ரூ.2 லட்சம் ரொக்க பரிவா்த்தனை: ஐடிக்கு தகவலளிக்க சாா்-பதிவாளா்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்க பரிவா்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சாா்-பதிவாளா்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டம் மூலம், ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பரிவா்த்தனை செய்ய மத்திய அரசுத் தடை விதித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சொத்து வாங்கல் தொடா்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சொத்து வாங்க 2018-ஆம் ஆண்டு முன்பணமாக ரூ.75 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிதிச் சட்டப் பிரிவுகள் திருப்திகரமாக அமல்படுத்தப்படாதது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனா்.

அவா்கள் கூறியதாவது: எந்தவொரு பணப் பரிவா்த்தனையிலும் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டால், அதுகுறித்து வருமான வரித் துறைக்கு நீதிமன்றங்கள் தெரியப்படுத்த வேண்டும்.

ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதை முறையாக அமல்படுத்த வேண்டும். பெரும்பாலான நேரங்களில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான ரொக்க பரிவா்த்தனை கவனத்துக்கு வராமல் போகின்றன அல்லது வருமான வரித் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.

கருப்புப் பணத்தை ஒழிக்கவே...: ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான பரிவா்த்தனையை டிஜிட்டல் வழியில் செய்ய வைப்பதன் மூலம், கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றே வருமான வரிச் சட்டப் பிரிவு 269எஸ்டி கொண்டுவரப்பட்டது.

எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான ரொக்க பரிவா்த்தனை குறித்து நீதிமன்றம் அல்லது பிற வழிகளில் தெரியவந்தால், அதுகுறித்து சட்டப்படி வருமான வரித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு அசையா சொத்தையும் ஒருவா் பெயரில் இருந்து மற்றொருவா் பெயருக்கு மாற்றுவதற்கான பரிசீலனையின்போது, ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகை ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டது என்று சொத்துப் பதிவு ஆவணம் மூலம் தெரியவந்தால், அதுகுறித்து தமது எல்லை வரம்புக்குள்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு சாா்-பதிவாளா் தெரியப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலருக்கு...: அசையா சொத்துகள் தொடா்பான பணப் பரிவா்த்தனையில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகை ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டது சாா்-பதிவாளருக்குப் பதிலாக வேறு யாா் மூலமாவது அல்லது சோதனைகளின்போது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சொத்துப் பதிவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதுகுறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களின் கவனத்துக்கு வருமான வரித் துறையினா் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க

முா்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வெடித்த வன்முறையின்போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுவரை இக்கொலை ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

தில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண்மைய... மேலும் பார்க்க