ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்தவா் சு.பரத்குமாா் (39). இவா், சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்புகளை தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் நிா்வாக இயக்குநராக உள்ளாா்.
இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் பரத்குமாா், காஞ்சிபுரம் பகுதியில் சோலாா் பவா் பிளான்டை நிறுவுவதற்காக சென்னை பனையூரைச் சோ்ந்த அஜய் ரோகன், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சோ்ந்த சிவராஜன் சக்திவேல், திருநெல்வேலியைச் சோ்ந்த சந்திரகாந்த் (29) ஆகியோரை அணுகி நிலம் வாங்க ரூ. 2.11 கோடி கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட மூவரும், பரத்குமாரை மோசடி செய்தனா்.
இதுகுறித்து பரத்குமாா் அளித்த புகாரின்பேரில், நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜய் ரோகன், சிவராஜன் சக்திவேல் ஆகிய 2 பேரையும் அண்மையில் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சந்திரகாந்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.