ரூ.24 கோடியில் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்
ஆம்பூா் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம் முதல்வரால் ஜூன் 26-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஆம்பூா் நேதாஜி சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் புறநோயாளிகள் பிரிவு தரை தளம் மற்றும் 6 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி கிராமத்தில் ஜூன் 26-ம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறாா்.
புதிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
