செய்திகள் :

ரூ.25 கோடி மதிப்பில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணி விரைவில் தொடக்கம்

post image

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ரூ.25 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. 2013-ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் மேற்கொள்ளுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் (பொ) சங்கர சுந்தரேஸ்வரன் வரவேற்றாா்.

இதில் ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், கன்னிமூல கணபதி, சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் தமிழக அரசு நிதி மற்றும் உபயதாரா்கள் பங்களிப்புடன் ரூ.25 கோடி மதிப்பில் அரசு அனுமதி பெற்று விரைவில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அறங்காவலா்கள், உபயதாரா்கள் உள்பட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பங்கேற்றனா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க