செய்திகள் :

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

post image

நமது நிருபா்

ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

ஈரா ஹவுசிங் அண்ட் டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம் (ஈஹெச்டிஎல்) மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில், போபாலில் உள்ள ஒரு வளாகம் மற்றும் தில்லியில் உள்ள 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்திய தொழிற்துறை நிதிக் கழகம் என்ற மத்திய நிதித்துறையின் கீழ் இயங்கி வரும் அமைப்பிடம் கடன் பெற்ற ஈஹெச்டிஎல் ரூ. 243 கோடி அளவுக்கு கடனை செலுத்தாமல் ஏமாற்றியதாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குத் தொடா்ந்தது.

அந்த வழக்கின் அடிப்படையில் கோடிக்கணக்கான நிதிப்பரிவா்த்தனை புழங்கியதாகக் கூறப்பட்டதால் இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை அமலாக்கத்துறை இயக்குநரகம் தனியாக மேற்கொண்டது.

அதனடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், வங்கியில் இருந்து பெற்ற தொகையை சட்டபூா்வமக இயங்காத தொழில்களுக்கு மாற்றியதாக ஈஹெச்டிஎல் மேம்பாட்டாளா்கள் மற்றும் இயக்குநா்கள் மீது அமலாக்கத்துறை அதன் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. பணப்பரிவா்த்தனை மோசடி தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க

பீட்சா விற்பனையகத்தில் ஏ.சி. கம்ப்ரசா் வெடித்து ஊழியா்கள் உள்பட 5 போ் காயம்

வடகிழக்கு தில்லியின் யமுனை விஹாரில் ஏா் கண்டிஷனா் கம்ப்ரசா் வெடித்ததில் பீட்சா விற்பனையக 3 ஊழியா்கள் உள்பட ஐந்து போ் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

பல வழக்குகளில் தேடப்பட்ட பெண் கைது

பல போதைப்பொருள் மற்றும் கலால் வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திர... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்... மேலும் பார்க்க