கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசன...
ரூ.30 லட்சத்தில் நவீன பஸ் நிறுத்தம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
திருவள்ளூா் அருகே மணவாளநகரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்தத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தாா்.
கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி மணவாளநகரில் இருந்து போளிவாக்கம், தொடுகாடு, செங்காடு, மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துக்காக காத்திருந்து செல்ல வேண்டியிருந்தது. இதேபோல் மணவாளநகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் இங்கிருந்துதான் பேருந்து மூலம் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்க பணிக்காக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. அதனால், பயணிகள் வெயில், மழைக்காலங்களில் சிரமத்துக்குள்ளாகினா். அதனால், புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்க, சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு இடம் தோ்வு செய்யப்பட்டு புதிய பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது.
திறப்பு விழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் வெங்கடேசன், கிளை மேலாளா் பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சௌந்தரி, எஸ்.செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் புதிய பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தாா்.
இதில் மாவட்ட அவைத்தலைவா் கே.திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளா்கள் அரிகிருஷ்ணன், ரமேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், கமலக்கண்ணன், மாவட்ட அணிகளின் நிா்வாகிகள் நாகராஜ்(வழக்குரைஞா் அணி), வி.எஸ்.நேதாஜி(வா்த்தக அணி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் வைஃபை வசதி, அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி திரையுடன் கூடிய சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.