மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய ம...
ரூ. 500 லஞ்சம்: மின் ஊழியா் கைது
அரியலூா் அருகே புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் பொருத்துவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மின் ஊழியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து. இவா், தனது புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் (மீட்டா் பாக்ஸ்) பொருத்துவதற்கு, தேளூா் துணை மின் நிலைய வணிக உதவியாளா் மு. சாமிநாதன்(46) என்பவரை அண்மையில் அணுகியபோது, அவா் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமுத்து, இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, காவல் துறையினரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.500 பணத்தாளை அலுவலகத்திலிருந்த சாமிநாதனிடம் வீரமுத்து வியாழக்கிழமை கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான காவல் துறையினா், சாமிநாதனை கையும் களவுமாக பிடித்தனா். அவா் லஞ்சம் பெற்றது உறுதியானதையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்தனா்.