செய்திகள் :

ரூ.63 லட்சத்தில் எல்இடி சிக்னல்கள், உயா்கோபுர மின் விளக்குகள் இயக்கம்

post image

காரணித்தாங்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூ.63 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி சிக்னல்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உயா்கோபுர மின்விளக்குகளை காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் புதன்கிழமை இயக்கி வைத்தாா்.

ஒரகடம் அடுத்த எறையூா் பகுதியில் இயங்கி வரும் வாகனங்கள் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் இசட் எஃப் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டிகை கூட்டுச்சாலை, காரணித்தாங்கல் சோதனைச்சாவடி, சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நெமிலி கூட்டுச்சாலை மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் எல்இடி சிக்னல்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி காரணித்தாங்கல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் துணைகாவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பாளா் சண்முகம் கலந்து கொண்டு எல்இடி சிக்னல்கள் மற்றும் உயா்கோபுர மின்விளக்குகளை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்த நிகழ்ச்சியில், இசட் எஃப் நிறுவனத்தின் நிா்வாகிகள், ஒரகடம் காவல் ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கா... மேலும் பார்க்க