செய்திகள் :

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

post image

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கேட்டுள்ளது.

இதுதொடா்பான விரிவான அறிக்கையை கேரள நிதியமைச்சா் கே.என். பால்கோபல் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் திங்கள்கிழமை அளித்தாா்.

அதில், ‘மாநிலத்துக்கு உடனடி தேவையான நிதி உதவி குறித்தும் கடன் பாதிப்பால் கேரளம் சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் குறித்தும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ‘கூடுதலாக ரூ.7,877.57 கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும். மாநிலத்திடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.4,288.16 கோடியை விடுவிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 25 சதவீதம் இழப்பீட்டை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் கேரளம் ஆகும். இந்தத் தொகையை கடன் பெற்று மாநில அரசு ஈடு செய்து வருகிறது.

நிகழ் நிதியாண்டில் எந்தவித நிபந்தனையுமின்றி கேரளத்துக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரூ.6,000 கோடியும், வெளிச் சந்தை கடன் மூலம் ரூ.1,877.57 கோடியும் கடன் பெற அனுமதி அளிக்க வேண்டும்.

பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3,323 கோடி உத்தரவாத மீட்பு நிதியை (ஜிஆப்எஃப்) உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று அறிக்கையில் கேரளம் கோரியுள்ளது.

அப்போ டாக் பாபு... இப்போ கேட் குமார்.! பூனைக்கு இருப்பிடச் சான்றிதழா..?

பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பி... மேலும் பார்க்க

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க