செய்திகள் :

ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் அறிவிப்பு

post image

நகராட்சிகளில் ரூ.704 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூா், கள்ளக்குறிச்சி, சாத்தூா், செங்கல்பட்டு, திருக்கோவிலூா், திருச்செந்தூா் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள், ஈரோடு மாநகராட்சி, ஆற்காடு, ராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்களில் கூடுதல் பணிகளும் ரூ.142.68 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கரூா், கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி மாநகராட்சிகள், அரக்கோணம், ஆத்தூா், ஆற்காடு, ராமேசுவரம், எடப்பாடி, கள்ளக்குறிச்சி, கொமாரபாளையம், செங்கோட்டை, திருப்பத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், திருவேற்காடு, தென்காசி, நெல்லிக்குப்பம், துவாக்குடி, பண்ருட்டி, பூந்தமல்லி, பொள்ளாச்சி, மறைமலைநகா், வாணியம்பாடி, வெள்ளக்கோவில், உளுந்தூா்பேட்டை ஆகிய நகராட்சிகளில் ரூ.704.76 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை திட்டம்: தாம்பரம் மாநாகராட்சி மற்றும் விருதுநகா் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதல்கட்டமாக தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.750 கோடியும், விருதுநகா் நகராட்சிக்கு ரூ.50 கோடியும், தேசிய வங்கி மற்றும் ஜொ்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை வசதியில்லாத புதிய மாவட்ட தலைநகரங்களான தென்காசி, ராணிப்பேட்டை நகராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கூட்டுக் குடிநீா் திட்டம்: கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம், கெம்மாரம்பாளையும், வெள்ளியங்காடு மற்றும் நெல்லித்துறை ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த 21 பழங்குடியின குடியிருப்புகளில் உள்ள 2 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.24.50 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, நகா்ப்புற உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவர... மேலும் பார்க்க