செய்திகள் :

ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு!

post image

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆதாரங்கள் சேகரித்துள்ளதால் மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி அமைச்சராக பதவி வகித்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ. 98.25 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அரசு ஊழியா்கள், பல்வேறு நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் 2021-இல் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உயா்நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் 2-ஆவது முறையாக உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.

ஆதாரங்களை சேகரித்தால் எஸ்.பி. வேலுமணி மீது மீண்டும் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இன்றைய விசாரணையில், "எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால் அவர் மீது வழக்கு தொடர பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார். அதனால் எஸ்.பி.வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை" என உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை கூறியது.

இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை செப். 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Public Works Contracts Scam: S.P. Velumani's name added again in the case

நாளை முகூா்த்த தினம்: பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

முகூா்த்த தினத்தையொட்டி, சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஆக.4) பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் தொடா்பாக, தலைமைச... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆக.31-ஆம... மேலும் பார்க்க

ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வங்கிகள் செயலாற்ற வேண்டும்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தல்

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தினாா். சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ... மேலும் பார்க்க

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதி... மேலும் பார்க்க